இந்து மக்கள் கட்சி அர்ஜுன்சம்பத் கும்பலால் சிறீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்வினையாகக் கிளர்ந்தெழுந்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மீது கலைஞர் தலைமையிலான தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச்சட்டத்தை ஏவியது. 40 தோழர்கள் 15 நாள் காவலில் இருந்து பிணையில் வந்தனர். பெரம்பலூர் இலட்சுமணன், தாமோதரன், கோபி இராம.இளங்கோவன்,அர்ச்சுனன்,முருகானந்தம், ஈரோடு குமரகுரு சென்னை குமரன் ஆகிய தோழர்கள் மீது தேசியப்பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டு ஐந்து மாதங்களாகச் சிறையில் உள்ளனர். பெரியாரியல் கடமையாற்றிய தோழர்கள் மீது தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுத்த தமிழக அரசைக்கண்டித்து 16.03.2007 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன.
Wednesday 27 June, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment